தகவல் ஆணையம் தொடக்கக் கல்வி இயக்குனருக்கு உத்தரவு 

மனுதாரர் கோரி உள்ள தகவல்களை 10 நாட்களுக்குள்   


இலவசமாக  வழங்கி அதன் நகலினை ஆணையத்திற்கு வழங்க 

உத்தரவு.



மத்திய பட்ஜெட் - மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கீடு.

டெல்லி: இந்த 2013-14ம் நிதியாண்டிற்காக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், கல்விக்காக, கடந்தாண்டைவிட கூடுதல் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவளத் துறைக்கு ரூ.65,867 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி என்பது அரசின் உயர்ந்தபட்ச முக்கியத்துவத்தைப் பெற்ற துறையாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை சிறப்புச் செயலாளராக பி.அமுதா நியமனம் தமிழக அரசு உத்தரவு.

சென்னை. 27.2.13.
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குனர் பி.அமுதா மாற்றப்பட்டு, உள்துறை, மதுவிலக்கு, கலால் துறை சிறப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன்  பிறப்பித்தார்.
 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டங்கள் - வேலை வாய்ப்பிற் -காக தொலைத்தூரக் கல்வி வாயிலாக பயிலும் இளநிலை பட்டத்திற்கு சமமாக கருதி அரசாணை வெளியீடு.G.O. (MS) NO.25 HIGHER EDUCATION (K2) DEPT DATED.22.02.2013 


தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்று அமைச்சர்கள் நீக்கம்.


சென்னை: தமிழக அமைச்சரவையிலிருந்து மூன்றுஅமைச்சர்களை நீக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அவர்களுக்கு பதில் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அமைச்சரவையில் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்த கோகுல இந்திரா, பள்ளி கல்வி, இளைஞர் நலன் சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சராக இருந்த என்.ஆர்.சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் கே.எஸ்.விஜய் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதில், டி.பி.பூனாட்சி, டாக்டர் வைகைச்செல்வன், கே.சி.வீரமணி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்
நன்றி...  நன்றி.... நன்றி.....

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை பெற வேண்டும் என்பதற்காக பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. இயக்கம் சார்பில் பெறப்பட்ட RTI தகவல்கள் மற்றும் அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு பெறப்பட்ட கடிதங்கள் போன்றவை ஒருசில சான்றுகளாகும்.  இவைகள் சமீபத்தில் இணையவழி மூலம் அறிந்திருப்பீர்கள். 

இவைகளை வெளியிட்டு நம் ஆசிரியர் சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஊதிய குழு சார்ந்த தகவல்களை அறிந்துகொள்ள செய்ததற்கும், மற்றும் எங்கள் சங்கத்தின் செயல்பாடுகளை நம் ஆசிரிய நண்பர்கள் அறிந்து கொள்ளவும் 

இச்செய்திகளை வெளியிட்ட இணையவழியில் கல்வி சேவை செய்துவரும் எனதருமை நண்பர்கள்  திரு. சதீஷ் (TN KALVI) அவர்களுக்கும் மற்றும் திரு.கார்த்திக் (TN TAM) அவர்களுக்கும் இயக்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

நண்பர்களின்  ஒத்துழைப்பிற்கு நன்றி. எங்கள் பணி தொடரும் இவர்கள் போன்ற  நண்பர்களின் ஒத்துழைப்புடன். தகவல்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

அன்புடன் C.T. ROCKLAND, DEPUTY GENERAL SECRETARY.


வரையறுக்கப்பட்ட  விடுமுறை  நாட்களுக்கான விழாக்களின் பட்டியலை விளக்கும் 
அரசாணைகளை உங்களுக்காக வெளியிட்டுள்ளோம். பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள். 


 G.O. No. 183. Date. 13.07.2007. வரையறுக்கப்பட்ட விடுமுறை
         நாட்களின்   பட்டியல்.

         Click Here to Download the G.O.
        

   G.O.No.36. Dt.02.03.2012 பகவான் வைகுந்தசாமி பிறந்த நாள் 
         வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் சேர்ப்பு.
                  
  Click Here to Download the G.O.

தொடக்கக் கல்வி - குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி இல்லாத பள்ளிகள் - உச்சநீதிமன்றத் தீர்ப்பாணையின் படி குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்த எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை அனுப்ப இயக்குநர் உத்தரவு.



பெல் நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணி வாய்ப்பு.

பெல் நிறுவனத்தின் இன்ஜினியரிங் காலி இடங்கள் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 80ம், மெக்கானிகலில் 25ம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐ.டி.,யில் 45 என்ற அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தமிழ்நாடு அனைத்து  ஆசிரியர் சங்கம் 1.6.2009 க்கு பின்னர் நியமனம் 
பெற்றவர்களை வைத்து ஏன் கோரிக்கை வைக்கிறது  என்பதற்கான விளக்கம்.

அனைவருக்கும் வணக்கம். எங்கள் சங்கம்  இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் பெற்றுத்தருவதில் அதிக அக்கறையுடன் செயல்படுவதை சமீபத்தில் எங்கள் சங்கம் பெற்ற RTI தகவல்கள், மற்றும் நிதிதுறையிடம் இருந்து பெறப்பட்ட கடிதங்களை நமது நண்பர்களின் இணையங்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

தற்போது (‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வந்துள்ள தகவலை பார்த்து 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு மட்டும் தான் பாதிப்பா ? எல்லோரும் தானே  GRADE PAY 2800 வாங்குகிறோம் என கேட்கின்றனர். அவர்களுக்கு விளக்கமளிக்க விரும்புகிறேன். கொஞ்சம் பொறுமையாக படியுங்கள்.

அரசாணை 234 வெளிவந்தபோது தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு புதிய ஊதியமானது, அவர்கள் முன்பு பெற்றுவந்த ஊதியத்தை விட குறைவாக இருந்தது. இவ்வாறான் நிலை இடைநிலை ஆசிரியர்களுடன்  சேர்த்து மொத்தம் மூன்று ஊதிய பிரிவினருக்கு மட்டும் ஏற்ப்பட்டது. இதனை நம் முன்னோடி சங்கங்கள் தெளிவாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்ப்பட்டிருக்கும். மாறாக 1.6.2006 க்கு  பின்னர் பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஊதியமானது அவர்கள் பெற்று வந்த ஊதியத்தை விட குறைவாக உள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு மிகைப்படுத்தி தகவல் தந்து கோரிக்கை விடுத்தனர். 

அதன் விளைவு அரசாணை 258. சங்கங்கள் சொன்னதாக இந்த அரசாணையில் உள்ளது. யாரும் நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லவில்லை என்று மறுக்க முடியாது. இதன் விளைவு 1.6.2006 லிருந்து 31.5.2009 வரை பணியேற்றவர்களுக்கு 1.86 முறை வந்தது. இதை விளக்கினால் விளக்கிக்கொண்டே போகலாம். 

அரசாணை 234 வெளிவந்தபோதே இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையாக அரசுக்கு முன்வைக்கவில்லை நம் முன்னோர்கள். இதன் தொடர் பாதிப்புதான் 1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு 5200 + 2800 +750.  1.6.2009 க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆறாவது ஊதிய குழு வராமல் இருந்தாலே அதாவது முந்தைய ஊதிய விகித ஊதியமே அதிகமாக இருந்திருக்கும். இடைநிலை ஆசிரியர்களின் பாதிப்பை அரசுக்கு எடுத்துக்காட்ட இவர்களையே முன்வைத்து பாதிப்பை முன்வைக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.  இவர்களுக்கு ஊதிய மாற்றம் ஏற்படுத்த அரசு முன்வரும்போது அனைத்து நிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும் முறையான ஊதிய மாற்றம் வரும்.

 எங்கள் சங்கம் சார்ந்த முயற்சிகளின் விவரங்களை அறிந்து கொள்ள உங்கள் இ - மெயில் முகவரியை cthomastata@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்களுக்கு தொகுப்புகளை அனுப்புகிறோம். பொறுமையாக படித்ததற்கு நன்றி.

உங்கள் நண்பன் C.T. ROCKLAND. DEPUTY GENERAL SECRETARY, TAMILNADU ALL TEACHER ASSOCIATION.    

(‎01.06.2009 )க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகள் களைவது தொடர்பான கோரிக்கை மீது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழக அரசு அறிவிப்பு.

                          
கல்வி உதவித் தொகை இணையதளங்கள்.

கல்வி உதவித் தொகை குறித்த தகவல்களை தரும் சில இணையதளங்களைப் பற்றி இங்கு அறிவோம்.



Honble Chief Minister


மாண்புமிகு. தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் 
அரங்கம் மகிழ்வுடன் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறது.

வாழ்க பல்லாண்டு. வாழ்க பல்லாண்டு.

கணித திறமையை வளர்த்துக் கொள்ள..

உங்களின் குழந்தைகள் கணித திறமையை வளர்த்துக்கொள்ள பிரத்தேகமான இணையதளம் ஒன்று உள்ளது. சில குழந்தைகள் கணிதத்தை தவிர மற்றவை படிக்கிறேன் என்று சொல்வதுண்டு. ஆனால் வாழ்க்கைக்கு கணிதம் மிக மிக அவசியமானதாகும். குழந்தைகளின் வருங்கால திறமையை நிர்ணயிப்பது கணிதம். மேற்படிப்புக்கு பயன்படுவதும் கணிதம் தான். குழந்தைகளின் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த இணையதளம் அமைக்கப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் 66 மனிதநேய மைய மாணவர்கள் தேர்ச்சி.

சென்னை: மத்திய அரசு தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதன்மை தேர்வில், சைதை துரைசாமி மனித நேய பயிற்சி மையத்தில் படித்த, 68 மாணவ, மாணவியர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.

சிவில் சர்வீஸ் முதன்மைத்தேர்வு - தேறியோர் விபரங்கள்.

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களுக்கான புதிய திட்டம்.

சென்னை: "உங்கள் பள்ளியில் அமெரிக்கா" என்ற திட்டத்தை, சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம், துவங்கியது

தொடக்கக் கல்வி - 2013-14ஆம் கல்வியாண்டில் 1 முதல் 8ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ / மாணவியர் களுக்கு TNPL மூலம் நோட்டுப் புத்தகங்கள் பெற்று வழங்க தேவைப் பட்டியல் கோரி உத்தரவு.


நர்சரி பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., பொருந்துமா? - மத்திய அரசு தகவல்.

நர்சரி பள்ளிகளுக்கு கல்வி உரிமை சட்டம் ( ஆர்.டி.இ.,) பொருந்தாது, நர்சரி பள்ளி சேர்க்கை குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம் என்று மத்திய அரசு, டில்லி ஐகோர்டில் தெரிவித்துள்ளது.

நிர்வாக ஒதுக்கீட்டு மாணவர்களுக்கும் கல்விக்கடன்.

நிர்வாக ஒதுக்கீட்டில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு வங்கியில் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பள்ளிகளுக்கான அறிவியல் உபகரணங்கள் - தலைமையாசிரியர்களுக்கு நெருக்கடி.

மதுரை: தமிழகத்தில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தில்(ஆர்.எம்.எஸ்.ஏ.,) ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள அறிவியல் உபகரணங்களை, குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களில் மட்டுமே வாங்க, தலைமையாசிரியர்கள் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

தமிழ் வளர்ச்சித் துறைக்கு தனி வலைதளம்: முதல்வர்.

சென்னை, பிப்.21 - தமிழ் வளர்ச்சித் துறைக்காக உருவாக்கப்பட்ட www.tamilvalarchithurai.org  என்ற புதிய வலைதளத்தை  தமிழ்நாடு முதலமைச்சர்  ஜெயலலிதா  நேற்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்

குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.


அகஇ - எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் பள்ளிகளில் 1 முதல் 4 வகுப்புகளுக்கு நடத்துதல் சார்ந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரை.


சிலிண்டரில் எரிபொருள் குறைவதை உணர்த்தும் கருவி : அரசு பள்ளி மாணவர் கண்டுபிடிப்பு.
பேரூர்:காஸ் சிலிண்டரில் எரிபொருள் குறைவதை ஒலி எழுப்பி உணர்த்தும் கருவியை, அரசு பள்ளி மாணவர் கண்டுபிடித்துள்ளார்.கோவை மாவட்டம், பேரூர், மாதம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவர், சந்துரு.

6 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அரசு இதழில் வெளியீடு.


ஊதிய குறை தீர்க்கும் பிரிவு - அறிக்கை உயர் அதிகாரிகள் மட்டத்தில் பரிசீலனையில் உள்ளது. 2பிரிவு அலுவலர்கள் மற்றும் தட்டச்சர் பணியிடங்கள் 31.03.2013 வரை நீடிக்கப் பட்டுள்ளது - இதற்கான ஆணை விரைவில் வெளியிடப் பட உள்ளது.

  தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்க (T.A.T.A) பொது செயலாளர் கோரிய தகவல்களுக்கு RTI பதில்கள் உங்களின் பார்வைக்கு.






இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( T.A.T.A.) அதிக அக்கறையுடன் செயல்படுகிறது என்பதற்கு ஆதாரமான செயல்பாடுகளில் இதுவும் ஒன்று.



‘‘கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல’’ விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வு முடிவை ரத்து செய்யக்கோரி வழக்கு தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.

மதுரை
கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித்தேர்வில்(‘ஸ்லெட்‘) கட்–ஆப் மதிப்பெண் நிர்ணயித்தது சரியல்ல என்று கூறி, தகுதித்தேர்வு முடிவுகளை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் தமிழக உயர்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தகுதித்தேர்வு

ஆன்-லைன் வழி செய்முறை பயிற்சி: சி.பி.எஸ்.இ. அறிமுகம்.

சென்னை: "சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 9 மற்றும், 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், ஆன்-லைன் வழியில், அறிவியல் பாடத்தில், செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்" என, அதன் தலைவர் வினீத் ஜோஷி அறிவுறுத்தி உள்ளார்.

திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி வங்கி ஊழியர்கள் உதவியுடன் பல லட்சம் ரூபாய் சுருட்டப்பட்டது அம்பலம் போலீஸ் சோதனையில் போலிமுத்திரைகள், முக்கிய ஆவணங்கள் சிக்கின.

திருச்சியில் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி கைதானவரின் அறக்கட்டளை அலுவலகம், வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்களும், குவியல், குவியலாக போலி முத்திரைகளும் சிக்கின.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு M.A/M.Sc க்கு முதல் ஊக்க ஊதிய உயர்விற்குபின் பிறகு M.Ed/M.Phil/PHdக்கு இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்து  அரசாணை வெளியீடு


பொதுப்  பணிகள் - கல்வித் தகுதிகள் - பாரதிதாசன் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட M.SC., INDUSTRIAL CHEMISTRY  பட்டத்தை,   M.SC., CHEMISTRY பட்டத்திற்கு இணையாக வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்விற்கு - கருதுதல். GO. (MS) NO.24 HIGHER EDUCATION (K2) DEPARTMENT DATED.13.02.2013 

CLICK HERE TO DOWNLOAD


Private Schools Fee Determination Committee 2013-2014 - Questionnaire, Fee Format and Enquiry Notice.


விண்வெளி அறியியல் உண்மைகள்.


   

     விண்வெளி பற்றிய அதிசயிக்கத்தக்க உண்மைகள்:
  • கடிகார திசையில் சுழலும் ஒரே கிரகம் வீனஸ் மட்டுமே.
  • யுரேனஸ் 27 சந்திரன்களை கொண்டுள்ளது.
  • நெப்டியூன் 13 சந்திரங்களை கொண்டுள்ளதாக இதுவரை கண்டறியப்பட்டுள்ளது.
  • வியாழன் கிரகம் குறைந்தது 63 சந்திரங்களை கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
  • பூமியில் 100kg எடையுள்ள ஒரு நபர் செவ்வாய் கிரகத்தில் 38kg எடையுடன் இருப்பார். செவ்வாயில் குறைவான புவி ஈர்ப்பு விசையே காரணம்.

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் பச்சைகுமாச்சி மலை.


தேனி மாவட்டத்தில், சின்னமனூர் அருகில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது பச்சைகுமாச்சி மலை.

அரசு பள்ளி வசதிகளை கணக்கெடுக்க கல்வித்துறை உத்தரவு.

தேனி: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை,மேல்நிலை பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கணக்கெடுக்க, பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
சத்துணவில் 13 வகையான கலவை சாதங்கள் வழங்கும் திட்டம் தொடங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் முதல்வரின் தலைமையில் நடைபெற்றது.

Press Release
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நள்ளிரவு முதல் அமலானது.


புதுடில்லி:பெட்ரோல் விலை லிட்டருக்கு, 1.50 ரூபாயும், டீசல் விலை, 45 காசுகளும் உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

உலகிலேயே உயரமான மகாத்மா காந்தி சிலை பாட்னா நகரில் திறக்கப்பட்டது.

உலகிலேயே மிக உயரமான மகாத்மா காந்தி சிலை பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நிறுவப்பட்டு உள்ளது. 
விண்கற்கள் விழுந்து ரஷ்யாவில் 900 பேர் காயம்.


 ரஷ்யாவில் விண்கற்கள் விழுந்ததில், 900 பேர், காயமடைந்தனர். விண்வெளியில் சுற்றி வரும் கோள்களுடனும், மற்ற சிறுகோள்களுடனும், "ஆஸ்ட்ராய்டு' எனப்படும் சிறுகோள்கள் மோதும்போது, தெறிக்கும் சிறு பாறைகள், "விண்கற்கள்' எனப்படுகின்றன.
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறைத் தேர்வர்கள் - புதிய பாடத்திட்டம் - அறிவியல் பாட செய்முறைத் தேர்வு - செய்முறைத் தேர்வு விலக்கு கோரும் தேர்வர்களின் சான்றிதழ்களில் Practical Exempted என பதிந்து வழங்குதல் -செய்முறைத் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்களித்தல் - அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அதிகாரம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. SCHOOL EDUCATION G.O. Ms. No. 23 Date.11.2.13.


டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 12-ந் தேதி குரூப்-2 தேர்வை நடத்தியது. 3,687 காலிப் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால் குரூப்-2 தேர்வு முடிவு வெளியிடப்படாமலேயே ரத்து செய்யப்பட்டது. அதன்பின்னர் நவம்பர் 4-ந் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.

தேர்வு எழுத மொத்தம் 6,49,209 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் இந்த தேர்வை 3,74,338 பேர் மட்டுமே எழுதினர். அந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை http://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வரும் 22-ம் தேதி நேர்காணல் நடக்கிறது.

CLICK HERE TO VIEW THE RESULTS.


அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் தாளாளரின் முடிவே இறுதியானது. உரிய கல்வி தகுதி மற்றும் பணி அனுபவம் இருப்பின் மாவட்ட கல்வி அலுவலர் அதனை ஏற்பளிக்க வேண்டும் என இயக்குனர் உத்தரவு.

வறட்சி - தமிழகத்தில் சென்னையை தவிர்த்து ஏனைய 31 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்தல் - காவேரி நதி நீரை கர்நாடகம் திறந்து விடாத நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட பயிர் பாதிப்பு அதனால் ஏற்பட்ட வறட்சி குறித்து காவேரி சிறப்பு கூடுதல் நிவாரணம் மற்றும் வறட்சி நிவாரணம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.


ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் - ஊழியர் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு தொகைக்கு 8 சதவீதம் 30.11.2011 வரையும், 8.6 சதவீதம் வட்டி விகிதம் 01.12.2011 முதல் வழங்க தமிழக அரசு ஆணை.38, DATE.11.2.13.



375 பள்ளிகள் சி.பி.எஸ்.இ. கல்வி திட்டத்துக்கு மாற முடிவு.

மதுரை : தமிழகத்தில் 13 ஆயிரம் தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் அதிகளவில் கல்வி கட்டணம் வசூல் செய்வதாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்

அரசு பள்ளிகளில் அடிப்படை வசதி: கல்வியாளர்கள் கோரிக்கை.

சென்னை: "தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு பள்ளிகளிலும், கட்டாய கல்வி சட்டத்தில் உள்ளபடி, அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும்" என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அனைவருக்கும் கல்வி திட்ட நிதி முறையாக செலவு செய்யாததை சுட்டிக்காட்டிய ஆசிரியர் பயிற்றுனரை இடமாற்றம் செய்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.

நாலந்தா பல்கலை.க்கு யுனெஸ்கோ கவுரவம் : நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். 

பிடித்தமான பதவியை தேர்வு செய்யும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகம் டி.என்.பி.எஸ்.சி. வியாழக்கிழமை நடத்துகிறது.

சென்னை
பிடித்தமான பதவியை தேர்வு செய்து கொள்ளும் வகையில் குரூப்–1 தேர்வில் முதல் முறையாக கவுன்சிலிங் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. புதிய முறையில் முதலாவது கவுன்சிலிங் சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களைத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு.


தமிழகம் முழுவதுமுள்ள 218 தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியிடங்களாகத் தரம் உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 நாமக்கல் மாவட்டத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு மீண்டும் பணிநியமன உத்தரவுகள்


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு செய்ததாக, டிஸ்மிஸ் செய்யப்பட்ட தொடக்கக் கல்வி தலைமை ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச நிலப் பரப்பளவு இல்லை: 1,500 பள்ளிகள் மூடப்படும்?

சென்னை: குறைந்தபட்ச நில அளவு இல்லாததன் காரணமாக, 1,500 பள்ளிகள், தொடர் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த விவகாரத்தில், ஜூன் மாதம் பள்ளிகள் துவங்கும் முன், ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது.

தேவை இலவசக் கல்வி, இலவசத் தேர்ச்சியல்ல!  தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.

கல்வியை இலவசமாகத் தர வேண்டும்; ஆனால், தேர்ச்சி இலவசமாகிவிடக் கூடாது என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
கண்டுபிடிப்புகள் கைவந்த கலை : இன்று(11.02.13) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம்.



இன்றைய உலகம் சூரியன் மøந்த பின் இரவிலும், பகலைப் போல மன்னுகிதே. அதற்கு காரணம் தாமஸ் ஆல்வா எடிசனின் கண்பிடிப்புகள். இவர்அமெரிக்காவின் நகரில் 1847ல் பிப்., 11ல் பிறந்தார். தனது அரிய கண்டுபிடிப்பால் உலகுக்கே வெளிச்சம் கொடுத்தார்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை "கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை" மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பு.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை கல்வி அதிகாரிகள் நேரடியாக சஸ்பெண்டு செய்ய அதிகாரம் இல்லை என்று மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மே மாதம் தான் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு.

பள்ளிகளில் மாணவர் சேர்கை மே மாதத்தில் தான் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் நியமன தகுதி மதிப்பெண்: தளர்த்த கோரிய மனுக்கள் தள்ளுபடி.

சென்னை: ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில், தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.