It is a place for the teacher's welfare. BY TRICHY C. THOMAS ROCKLAND.
ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு நிதி உதவி கோரும் விண்ணப்பம். தமிழகஅரசு வெளியீடு.
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
டிசம்பர் 30ம் தேதி குரூப் 1 தேர்வு-
18-11-2012.
சென்னை: இருபத்து நான்கு காலியிடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 தேர்வு, டிசம்பர் 30ம் தேதி நடக்கிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,), துணை ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள, 24 இடங்களை நிரப்புவதற்கான, குரூப்-1 போட்டித் தேர்வு, வரும் டிசம்பர் மாதம் 30ம் தேதி நடைபெற உள்ளது.
தகுதியுள்ள பட்டதாரிகள், அரசு பணியாளர் தேர்வாணையத்தின்,www.tnpsc.gov.in. என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: பள்ளி கல்வி இயக்குனர்.
பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்க பள்ளிகல்வி இயக்குனர் அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளனர்.
மாணவ - மாணவிகள் தங்களின் குறை / நிறைகளையும் மற்றும் அவர்களுக்கு பள்ளிகளில் ஏற்படும் பிரச்னைகளையும் தெரிவிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறையை அனைத்து வகை மாணவ, மாணவியர்கள் தவறாது பின்பற்ற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் .கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி - தனியார் உதவி பெறும் பள்ளிகள் - சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகள் - குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன்படி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை ஆசிரியர்களாக நியமிக்க இயக்குனர் உத்தரவு. தமிழ்நாடு தொடக்க கல்வி இணை இயக்குனரின் ( உதவி பெறும் பள்ளிகளில் ) செயல் முறைகள் ந.க.எண் :- 37718/எப்2/11 நாள் :- 15.11.2012.
D.T.Ed., பட்டய படிப்பு +2 கல்வித் தகுதிக்கு இணையானது: உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
D.TEd பட்டய படிப்பு பனிரெண்டாம் வகுப்புக்கு இணையானது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அறிவித்துள்ளது.
இரண்டு வருட ஆசிரியர் பயிற்சியான D.TEd பட்டய படிப்பானது +2 படிப்புக்கு இணையாகவே கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. மேலும் ஆசிரியர் பதவிக்கு 10ம் வகுப்பு + D.TEd + பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு மட்டுமே முறையான ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு அறிய இங்கே கிளிக் செய்யவும்.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு: ஒரு வாரத்துக்குள் இறுதி தேர்வுப் பட்டியல்.
ஆசிரியர் தகுதி மறுதேர்வில் வெற்றி பெற்றவர்களின் இறுதி தேர்வுப் பட்டியல், ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 6.56 லட்சம் பேர் பங்கேற்ற இந்தத் தேர்வில், 19,246 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நவம்பர் 6,7,8,9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் உரிய தகுதியுடையவர்களின் விவரங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து, இறுதித் தேர்வுப் பட்டியல் ஒரு வார காலத்துக்குள் வெளியிடப்பட உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் 20,525 பட்டதாரி ஆசிரியர்களும், 7,500 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட இருந்தனர். ஆனால், கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் 2,448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து, ஆசிரியர் தகுதி மறுதேர்வு அக்டோபர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. இடைநிலை ஆசிரியர்கள் மாநில பதிவு மூப்பின் அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையிலும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை-11-11-2012.
சிதம்பரம்: நிதி நெருக்கடி காரணமாக தவித்து வரும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் மறு தேதியின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக துணைவேந்தர் ராமநாதன் கூறியதாவது: நிதி நெருக்கடி காரணமாக தற்போது பல்வேறு தகவல்கள் ஊழியர்கள் மத்தியில் புரளியாக பேசப்படுகிறது. நிர்வாகத்தில், கண்டிப்பாக ஆள் குறைப்பு இல்லை. நிதி நிலை மோசமாக இருப்பதால், சம்பளம் கொடுப்பதில், சிக்கல் இருந்து வருகிறது.
மாணவரே இல்லாத அரசு பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்-11-11-2012.
ஆத்தூர்: மாணவர்களே இல்லாமல் இயங்கி வந்த, நகராட்சி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாவட்ட கல்வி அலுவலர், பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி, வடக்கு காடு சக்தி நகர் பகுதியில், 1966ம் ஆண்டு முதல், நகராட்சி தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, படிக்கும் மாணவர்களுக்கு ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் என, இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வந்தனர்.
தொடக்கக் கல்வி - வழக்குகள் நிலுவை விவரம் கோரி இயக்குனர் உத்தரவு.தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 2200 / DD(L)/ 2012, நாள். .11.2012
இதில் நிலுவையில் உள்ள வழக்கு சார்ந்த விவரங்களை எதிர்வரும் 2 & 3.11.2012 அன்று நடைபெறவுள்ள ஆய்வுக்கூட்டத்திற்கு பணிந்தனுப்பிட மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு (NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION 2012 - 13) இன்று முதல் விண்ணப்பம்.1.11.2011. to 9.11.2012.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
The amount of scholarship will be Rs.500/- per month. (As per M.H.R.D. Guidelines)
கல்வித் தகுதி: 2011-12ம் கல்வியாண்டில் 7ம் வகுப்பு பயின்று முழு ஆண்டுத் தேர்வில், பொதுப்பிரிவு மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும், எஸ்சி. எஸ்டி மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: என்.எம்.எம்.எஸ்., தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தை இணையதளத்தில் இன்று 1.11.2012 முதல் 9.1102012 ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விரிவான தகவல்கள் அறிய www.dge.tn.nic.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
தமிழகத்தின் அனைத்து கடலோர மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு (01.11.2012) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு.
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்
திருச்சி - பள்ளிகள்,
கோவை - பள்ளிகள், கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளிகள்,
திருப்பூர் - பள்ளிகள், கல்லூரிகள்
சேலம் - பள்ளிகள்
தருமபுரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
சென்னை - பள்ளிகள், கல்லூரிகள்
காஞ்சிபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவள்ளூர் - பள்ளிகள், கல்லூரிகள்
திருவண்ணாமலை - பள்ளிகள், கல்லூரிகள்
நாகை - பள்ளிகள், கல்லூரிகள்
தஞ்சை - பள்ளிகள், கல்லூரிகள்
புதுக்கோட்டை - பள்ளிகள், கல்லூரிகள்
திருவாரூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கடலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
விழுப்புரம் - பள்ளிகள், கல்லூரிகள்
இராமநாதபுரம் - பள்ளிகள், கல்லூரிகள்
தூத்துக்குடி - பள்ளிகள், கல்லூரிகள்
கன்னியாகுமரி - பள்ளிகள், கல்லூரிகள்
வேலூர் - பள்ளிகள், கல்லூரிகள்
கரூர் - பள்ளிகள்
உதகை - பள்ளிகள், கல்லூரிகள்
ஈரோடு - பள்ளிகள், கல்லூரிகள்
திருச்சி - பள்ளிகள்,
கோவை - பள்ளிகள், கல்லூரிகள்
பெரம்பலூர் - பள்ளிகள்,
திருப்பூர் - பள்ளிகள், கல்லூரிகள்
சேலம் - பள்ளிகள்
தருமபுரி - பள்ளிகள், கல்லூரிகள்
நெல்லை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகள், கல்லூரிகள்
SPECIAL SUMMARY REVISION OF ELECTORAL ROLL PERIOD EXTENDED TO 20.11.2012.
வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் பணி 20.11.2012 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 20.11.2012 வரை வேலை நாட்களில் விண்ணப்பம் பெறப்படும்.
நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள இக்காலகட்டத்தில் சிறப்பு முகாம்கள் எதுவும் நடைபெறாது.( There will not be any special campaign during this extended period) PRESS RELEASE NO.652.DATE.31.10.12.
ஆசிரியர்களை தாக்கும் மாணவர்கள். எங்கே செல்கிறது நமது கலாச்சாரம்?
கற்றுகொடுப்பது என்பதும் ஒரு கலையே. கற்றவர்கள்
எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கும் மனப்பக்குவம் வருவதில்லை. மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் கல்விப்பணியை தேர்வு செய்கின்றனர். இப்பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பயிற்சியின் போது இந்த மனப்பக்குவத்தை பெற்று கொள்கின்றனர்.
எல்லோருக்கும் கற்றுக்கொடுக்கும் மனப்பக்குவம் வருவதில்லை. மற்றவர்களுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்ற மனப்பக்குவம் உள்ளவர்கள் கல்விப்பணியை தேர்வு செய்கின்றனர். இப்பக்குவம் இல்லாதவர்கள் ஆசிரியர் பயிற்சியின் போது இந்த மனப்பக்குவத்தை பெற்று கொள்கின்றனர்.
கடந்த காலங்களில் ஆசிரியர்களால் மாணவர்கள், தண்டனை என்ற பெயரில் விரும்பத்தகாத நிலையில் தண்டிக்கப்பட்ட நிகழ்வுகளை மறுப்பதற்கில்லை. இவ்வாறான தண்டனைகளிலிருந்து மாணவர்களை நிச்சயம் பாதுகாக்கவேண்டும்.
தற்போது கல்விக்காக, மாணவர்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்களில் ஆசிரியர் மாணவர்களிடம் கண்டிப்பை காட்ட முடியாது, கூடாது.
அன்பினால் எல்லாவற்றையும் செய்ய முடியும். சில நேரங்களில் கண்டிப்பு தேவைப்படத்தானே செய்கிறது. இன்று கண்டிக்க வழியில்லாததால், மாணவர்கள் ஆசிரியர்களை தண்டிக்க தொடங்கிவிட்டனர். ஆசிரியர்களின் பாதுகாப்புக்காக யாரும் கவலைப்படாவிட்டாலும் வருத்தம் இல்லை. இன்றைய மாணவர்களின் நாளைய எதிர்காலம் இப்படியே போனால் என்னவாகும்?
இடைநிற்றல் இல்லாமல் பள்ளிக்கு மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்பதற்காக சட்டங்கள் உள்ளன.மாணவர்களை நியாயமான கண்டிப்புடன் ஆசிரியர் நடந்துகொள்ள அவசியம் சட்டம் தேவை. மருந்து கசக்கத்தான் செய்யும். கண்டிப்பும் அப்படியே இருக்கலாம். பேருந்துக்கு BRAKE அவசியம் தேவை. மாணவர்களுக்கு ஆசிரியரின் கண்டிப்பு தேவை. இன்றைக்கு பள்ளியில் நுழைந்தவுடன் ஆசிரியரைப் பார்த்து மாணவன் சொல்கிறான், சார், மாணவர்களை அடித்தால் ஆசிரியர்களுக்கு மூன்று ஆண்டு ஜெயிலாம், என்று. வார்த்தையால் கண்டிக்கவே வழியில்லாத போது எங்கே அடிக்க?
வேண்டவே வேண்டாம் - ஆசிரியர்களுக்கு மாணவர்களை எந்தவிதத்திலும் அடிக்கிற உரிமை. ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை மாணவர்களுக்கு கொடுக்க நியாயமான முறையில் கண்டிக்க உரிமை வேண்டாமா?
இன்றைய நிலையில் ஆசிரியர்களின் நிலைமை - தாக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். இந்த கலாச்சாரம் எங்கே சென்று முடியுமோ தெரியவில்லை.
ஆற்றுக்கு அணை அவசியம். குதிரைக்கு கடிவாளம் அவசியம். பேருந்துக்கு பிரேக் அவசியம். மாணவனுக்கு ஆசிரியரின் கண்டிப்பு அவசியம். தண்டனை வேறு. கண்டிப்பு வேறு. பிரம்பை கையாடாதவன் தன் மகனை பகைக்கிறான் என்று பைபளில் கூறப்பட்டுள்ளது. பள்ளியில் மாணவர்களை தங்கள் பிள்ளைகளாக எண்ணியே ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனனர். இன்றைக்கு பிரம்பு வேண்டாம். மாணவர்களை கண்டித்து நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்க்கு அனுமதி வேண்டும். எதிர்கால மாணவர்களின் வாழ்வு சிறக்க வழி பிறக்க வேண்டும்.
மாணவர்களால் ஆசிரியர்கள் கத்தியால் குத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இப்படியே போனால் நாளைய எதிர்காலம் எங்கே போகும்?
வெயிலின் வெப்பம் சுடுகிறது என்பதற்காக வெயிலே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? ......................................................................................
............................................................................................................................................................
.....................................................................................................................................................
மாணவர்களால் ஆசிரியர்கள் கத்தியால் குத்தப்படுவதும், கொலை செய்யப்படுவதும் தடுக்கப்பட வேண்டும். இப்படியே போனால் நாளைய எதிர்காலம் எங்கே போகும்?
வெயிலின் வெப்பம் சுடுகிறது என்பதற்காக வெயிலே வேண்டாம் என்று சொல்லிவிட முடியுமா? ......................................................................................
............................................................................................................................................................
.....................................................................................................................................................
Subscribe to:
Posts (Atom)