அரசாணை 62- இல் குறிப்பிடப்பட்டுள்ள ஈடுசெய்யும் விடுப்பு குறித்த அரசாணை 2218 நாள் 14.12.1981( பொதுத்துறை ) உங்கள் 
பார்வைக்கு.

CLICK HERE TO DOWNLOAD THE G.O.




உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்கம் - சென்னை - 600 101.

மாநில மையத்தின் செயற்குழுக் கூட்டம் 12.03.2015 பிற்பகல் மதுரையில் மாநிலத் தலைவர் திரு. மு. அய்யாச்சாமி, அவர்கள் தலைமையில், கெளரவத் தலைவர் திரு. அ. சுந்தரராஜன்,   அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் திரு. சி. செளந்தரராஜன், அவர்கள் அனைவரையும் வரவேற்று அறிக்கை வாசித்தார்.  
 
       மாநில பொருளர் திரு. அ. தம்பித்துரை, மாநில துணை தலைவர் திரு. கு. பால்ராஜ் அருள், மாநில துணைச் செயலர் திரு. ஜோசப் அண்டோரெக்ஸ், மாநில மகளிரணி திருமதி. ஈவ்லின் ஜெனட்,  மற்றும் 50 - க்கும் மேற்பட்ட உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     மாநில மையம், விவாதம் மேற்கொண்டு, பின்னர் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியரின் தர ஊதியமான ரூ.4700 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுவதை மாற்றி தனி ஊதியம் வழங்கிடக் கோரி வழக்குத் தொடர்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.

2. சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குட்பட்ட சென்னை, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், கோவை, விழுப்புரம் மாவட்ட உ.தொ.க. அலுவலர்கள் சார்பாக சென்னையில் தனி வழக்குத் தொடுப்பது எனத் தீர்மானிக்கப் பட்டது.
     13.03.2015 அன்று மதுரை கிளையில் வழக்குத் தொடர 42 உ.தொ.க. அலுவலர்கள் கையொப்பமிட்டனர்.

    இக்கூட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட பெண் உ.தொ.க. அலுவலர்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட உ.தொ.க. அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேற்காண் அறிக்கை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சங்க மாநில தலைமை நிலையச் செயலர் திரு. இரா. கணேசன் அவர்களால் வெளியிடப்படுகிறது.
உங்களுடைய இந்த ஆவணங்கள்
தொலைந்தால்
எப்படி திரும்பப் பெறுவது?
தமிழக அரசு துறைத்தேர்வுகள் மே-2015 க்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மே 2015 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
அறிவிக்கை நாள் : 1.03.2015
விண்ணப்பிக்க கடைசி நாள் : 31.3.2015.
மேலும் விவரங்களுக்கு :
www.tnpsc.gov.in
 இணைய தளத்தைப் பார்க்கவும்.www. tnpsc.gov.in