இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க 


விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(46)


இன்று 2வது முறையாக விண்வெளிப் பயணம்


மேற்கொண்டுள்ளார்.


 அவர், இன்று காலை 8.40 மணிக்கு கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் இருந்து விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் ரஷியா பெடரல் விண்வெளி ஏஜென்சியின் யூரி மலன்சென்கோ மற்றும் ஜப்பானைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் எக்ஸ்புளோரேஷன் ஏஜென்சியின் அகிஹிகோ ஹொசிடே ஆகியோரும் பயணம் மேற்கொண்டுள்ளார். இம்மூவரும், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள 32 பேர் கொண்ட குழுவுடன் வரும் செவ்வாய்க்கிழமை இணைந்து கொள்வர் என நாசா தெரிவித்துள்ளது. ஏற்கனவே சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் அதிக நாள் (195 நாள்கள்) தங்கி ஆய்வு செய்த வீராங்கனை என்ற சாதனையைப் புரிந்துள்ளது குறிப்பிடததக்கது.

No comments:

Post a Comment