ஊதிய குறைதீர்க்கும் பிரிவிடம் மனு  அனுப்புதல் விபரம்.

 ஊதிய முரண்பாடுகளை  களைய மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  அக்குழுவிடம் 04 .05 .12 க்குள் மனுக்கள் அனுப்பப்பட வேண்டும். இக்குழுஅமைக்கப்பட்டதிலிருந்தே கல்வித் துறைக்கு  பொருந்துமா என்ற கேள்வி கேட்கப்பட்டுகொண்டே 
 இருந்தது. 

தற்போது தபாலில் அனுப்பலாமா அல்லது  e-mail மற்றும் நேரில் தான் தர வேண்டுமா என்ற கேள்வி கேட்கப்பட்டு வருகிறது. சந்தேகம் வந்துவிட்டால் எது சிறந்ததோ அதையே செய்வது நல்லது. தபாலில் அனுப்புவது எளிது என்று அனுப்பி நம் முயற்சி வீணாகி விடக் கூடாது.எனவே மின் அஞ்சலில் அனுப்புவதே  சிறந்தது. மின் அஞ்சலில் அனுப்புபவர்கள் வசதிக்காக மனு மாதிரியை word  வடிவத்தில் bamini  இல் வடிவமைத்து இணைத்துள்ளோம். அதனை பதிவிறக்கம் செய்து  உங்கள்
 பெயர்,  முகவரி  போன்றவைகளை சேர்த்து pdf format ஆக மாற்றி மின் அஞ்சல் செய்யவும். நேரில் மனு அளிப்பவர்கள் pdf இல் உள்ளதை வசதிக்கேற்ப பயன்படுத்தவும்.  முயற்சி பயன் உள்ளதாக இருக்க வேண்டும். எனவே மின் அஞ்சல் அனுப்புவதே சிறந்தது. மின்னஞ்சல் முகவரி. dspgrc@tn.gov.in  





Click Here to download the model letter in word format for send e-mail after changing for yourself


   


1 comment:

  1. Very good sir. It's a chance to sg teachers. Each and every should use this chance.

    ReplyDelete