தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவர்கள், தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை அறிவியல் கல்லூரியின் அறிவியல் ஆய்வகங்களுக்கு அழைத்துசெல்லப்பட்ட நிகழ்வின் தொகுப்பு உங்களின் பார்வைக்கு.

    பள்ளி செயலர் திரு.சோமசுந்தரம் அவர்களின் ஆலோசனையின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் செல்வம் மற்றும் இடைநிலை ஆசிரியர் முத்துலட்சுமி அவர்களுடன் எட்டாம் வகுப்பு மாணவ - மாணவியர்களை கல்லூரி  ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கல்லூரி முதல்வர் திரு.சந்திரமோகன் அவர்கள் தலைமையில், விலங்கியல் துறை தலைவர் திரு.பட்சிராஜன்  முன்னிலையில் வரவேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது.

மாலையில் கல்லூரி முதல்வர் அவர்கள் மாணவ -  மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.நிகழ்ச்சியின் நிறைவாக தாவரவியல் துறை துணை தலைவர் வீரலட்சுமி அவர்கள் நன்றி கூற மாணவர்களை மகிழ்வித்த இந்நிகழ்வு நிறைவு பெற்றது.

நிகழ்வின் புகைப்படத்தொகுப்பு உங்களுக்காக.   
















No comments:

Post a Comment