தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் ஈரோடு துரைபாண்டியன் மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயற்சி அளித்தார்

Thanks & Regards,
L.Chokkalingam,Head Master,Chairman Manicka Vasagam School,Devakottai.9786113160 .

பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்க்கும் பயிற்சி முகாம்





தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்க்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் வளர்க்கும் பயிற்சி முகாம் நடைபெற்றது .பயிற்சியில் 8ம் வகுப்பு மாணவர் ஷன்முகப்ரகாஷ் வரவேற்றார் .பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கி தேசிய வருவாய் வழி தேர்வு குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார்.கவிஞ்ர் லயன் தெட்சிணா மூர்த்தி முன்னிலை வகித்து பயற்சி குறித்தும் தேர்வு குறித்தும் விளக்கமாக சிறப்புறை வழங்கினர் .ஈரோடு ரயில்வே பள்ளி ஆசிரியர் துரைபாண்டியன் பய்ற்சியளராக கலந்து கொண்டு மாணவ,மாணவிகளுக்கு வார்த்தை அமைப்பு,கணித முறை,நுண்ணறிவு திறன் ,வினாக்கள் அமைப்பு ,பதிலளிக்கும் கூறுகள் குறித்தும் பயற்சி அளித்தார் .பயிற்சியில் பள்ளி மாணவ மாணவியர்கலந்து கொண்டு பயன் பெற்றனர்.இனி வரும் காலங்களில் .பயிற்சி வகுப்புகள் மாணவர்களின் நலன் கருதி வாரத்தில் இரண்டு நாட்கள் நடத்த பட உள்ளன.இதனால் அதிகமான மாணவர்கள் பயன் பெற்று அரசால் வழங்கப்படும் படிப்பு உதவி தொகை பெற வாய்ப்பு உண்டு.தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நான்கு ஆண்டுகளுக்கு மாதம் 500 ரூபாய் அரசால் வழங்கப்படும் .பயற்சி நிறைவில் 8ம் வகுப்பு மாணவி அபிநயா நன்றி கூறினார்.பயற்சி வகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனக் கலந்து கொண்ட மாணவ மாணவியர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment