சிவில் சர்வீஸ் முதன்மைத்தேர்வு - தேறியோர் விபரங்கள்.

டெல்லி: கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற சிவில் சர்வீஸ் மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள், நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டு, IAS, IFS, IPS மற்றும் இதர மத்திய அரசின் பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வானது, மார்ச் 4ம் தேதி தொடங்கும். டெல்லியிலுள்ள UPSC அலுவலகத்தில் இது நடைபெறும். இவற்றில் கலந்துகொள்ளும் நபர்களுக்கான தனிப்பட்ட தேதி மற்றும் நேர விபரங்கள், தனித்தனியாக தெரிவிக்கப்படும். மேலும், அந்த விபரங்களைhttp://www.upsc.gov.in/ என்ற இணையதளத்திலும் காணலாம்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றும், நேர்முகத்தேர்வு தொடர்பான தகவல்களைப் பெறாதவர்கள், 011-23385271, 23381125, 23098543 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.
முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்கள் மற்றும் இதர அனைத்து விபரங்களையும் அறிந்துகொள்ளhttp://www.upsc.gov.in/ என்ற வலைத்தளம் செல்க.

No comments:

Post a Comment