உலகிலேயே உயரமான மகாத்மா காந்தி சிலை பாட்னா நகரில் திறக்கப்பட்டது.

உலகிலேயே மிக உயரமான மகாத்மா காந்தி சிலை பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நிறுவப்பட்டு உள்ளது. 

வெண்கலத்தால் ஆன இந்த சிலையின் மொத்த உயரம் 70 அடி. இதில் பீடத்தின் உயரம் மட்டும் 30 அடி ஆகும். மகாத்மா காந்தியின் இரு பக்கத்திலும் இரு குழந்தைகள் நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

 பீகார் மாநில அரசு ரூ.10 கோடி செலவில் இந்த பிரமாண்டமான சிலையை நிறுவி இருக்கிறது. பீகார் முதல்–மந்திரி நிதிஷ்குமார் இன்று இந்த சிலையை திறந்து வைத்தார்.
 

No comments:

Post a Comment