தேசிய திறனறித் தேர்வு: விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம்.

தேசிய திறனறித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பள்ளித் தலைமையாசிரியர்கள் செவ்வாய்க்கிழமை (செப்.17) முதல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம்.
 அரசுத் தேர்வுகள் துறையின்
www.tndge.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 24-ஆம் தேதி வரை அவர்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்.
ஒவ்வொரு பள்ளிக்குமான பாஸ்வேர்டை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பெற்றுக்கொள்ளலாம் என, அரசுத் தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment