அக். 10ல் சட்டப்பேரவைக் கூட்டம் : 

சபாநாயகராகிறார் தனபால்.


சபாநாயகர் தேர்தலுக்காக தமிழகத்தின் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் அக்டோபர் 10ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர் தேர்தலுக்காக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என்று பேரவைச் செயலாளர் அறிவித்துள்ளது.
சபாநாயகர் தேர்தலில் அதிமுக வேட்பாளராக தனபால் போட்டியிடுகிறார். இவர் தற்போது துணை சபாநாயகராக பதவி வகித்து வருகிறார்.
இவர் ராசிபுரம் (தனி) தொகுதியில் இருந்து சட்ட பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.
கடந்த சனிக்கிழமையன்று தமிழக சட்டப்பேரவை சாபநாயகராக இருந்த டி. ஜெயக்குமார், தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, துணை சபாநாயகராக இருக்கும் தனபால் சபாநாயகர் பதவியை கவனித்து வருகிறார்.

No comments:

Post a Comment