தனி நபர் உரிமைக்கு பங்கம் வரக்கூடாது ;
R.T.I. ACT  குறித்து பிரதமர் கவலை.


டில்லி: நாட்டில் உள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் ( ரைட் டூ இன்பர்மேஷன் ) மூலம் தனி நபர் உரிமையை பாதிக்கும் அளவிற்கு பொதுமக்கள் நடந்து கொள்ளக்கூடாது என்றும் , இந்த சட்டம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டியுள்ளது என்றும் டில்லியில் நடந்த . மத்திய தகவல் கமிஷனின் மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் பேசினார். 


அவர் மேலும் பேசுகையில்; தகவல் அறியும் உரிமை சட்டத்தினை பயன்படுத்தி, தனிநபர் குறித்து தேவையில்லாமல் தகவல்கள் திரட்டுவதை தடுக்க சில கட்டுப்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் தனிநபரின் அடிப்படை உரிமைகள் , சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்பட கூடாது. ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், இது போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து கேள்வி எழுந்துள்ளது. இச்‌சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தின் கீழ் தனிநபரின் விஷயங்களை கேட்கின்றனர். இதில் தங்களுக்கு பெரிய பலம் கொடுத்திருப்பதாக சிலர் உணர்கின்றனர். 

இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது. இதனை தடுக்க சில கட்டுப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்காமல், தனியார் -பொதுத்துறை பங்களிப்புடன்,தனியார் துறையிலும், தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) ‌நீட்டிப்பு செய்யப்பட வேண்டும் இவ்வாறு பிரதமர் பேசினார்.





No comments:

Post a Comment