5 பள்ளிகளை மூட முடிவு: 10 பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி.

திருவாடானை: பத்திற்கும் குறைவான மாணவர்களே உள்ளதால், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியத்தில், ஐந்து ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை ஆரம்பிக்கவும், கல்வித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

திருவாடானை ஒன்றியத்தில் 117 ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள்உள்ளனஇவற்றில் குழந்தைகளை சேர்ப்பதில்இப்பகுதி மக்களுக்கு ஆர்வம்இல்லைஇதனால் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 10க்கும் குறைவானமாணவர்களே படித்து வருகின்றனர்.
கலியணி கிராமத்தில் குழந்தைகள் சேராததால் இங்குள்ள ஒன்றியதுவக்கப்பள்ளிகடந்தாண்டு மூடப்பட்டதுபிள்ளையாரேந்தல் ஒன்றியதுவக்கப்பள்ளியில் 7, கீழ்க்குடியில் 2, காட்டியனேந்தலில் 4, கீழக்கோட்டையில்2, கிளியூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் படித்துவருகின்றனர்.
இப்பள்ளிகளையும் விரைவில் மூடவும்ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்குஇடமாற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்ஆண்டுதோறும் மாணவர்களின்எண்ணிக்கை குறைந்து வருவது குறித்து இப்பகுதி கிராம மக்கள்கூறியதாவது:
ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை அடிப்படை கல்வி அறிவு அவசியம் வேண்டும்.இதுஅரசு துவக்கப் பள்ளிகளில் முறையாக கிடைப்பதில்லைஎனவே,தனியார் பள்ளிகளை நாட வேண்டி உள்ளதுஎன்றனர்.
தொடக்கக் கல்வி அலுவலர் ஒருவர் கூறியதாவதுஇலவச சீருடைநோட்டு,புத்தகங்கள்பை இலவசமாக கொடுத்தும்குழந்தைகளை அரசு பள்ளிகளில்சேர்ப்பதில்லைவிழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தியும்ஆசிரியர்கள்முறையாக பாடம் நடத்தியும்பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்படவில்லை.
ஆகவேகுறைந்த மாணவர்களை உள்ள பள்ளிகளை மூட முடிவுசெய்யப்பட்டுள்ளதுதிருவாடானைஎஸ்.பி.பட்டினம்வெள்ளையபுரம்,பெருவாக்கோட்டைகல்லூர்மங்களக்குடிதொண்டி கிழக்குபாசிபட்டினம்,என்.மங்கலம் போன்ற ஒன்றிய துவக்கப் பள்ளிகளில்ஆங்கிலக் கல்வி முறைவிரைவில் அமல்படுத்தப்படும்.
தனியார் பள்ளிகளுக்கு நிகராகமாணவர்களை உருவாக்கதீவிர முயற்சிஎடுத்து வருகிறோம்என்றார்.

No comments:

Post a Comment