மைக்ரோசாப்ட் தேர்வு: தமிழக சிறுவன் சாதனை.


கலிபோர்னியா: மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய தொழில்நுட்ப வல்லுநருக்கான தேர்வில், தமிழகத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் பிரணவ் கல்யாண் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
மதுரை மாவட்டம் பாலமேட்டைச் சேர்ந்தவர் கல்யாண். இவரது மகன் பிரணவ் கல்யாண் (9). தற்போது கல்யாண் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள வங்கி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விசாலாட்சியும் அங்குள்ள வங்கி ஒன்றில் ஆடிட்டராக பணியாற்றுகிறார். இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 12ம் தேதி நடத்திய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வில் சிறுவன் பிரணவ் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இன்ஜினியரிங் மாணவர்களுக்கான இந்த தொழில்நுட்பத்தேர்வில், சிறுவன் பிரணவ் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளது அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் பெருமை அளிப்பதாக உள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment