போலியோ சொட்டு மருந்து: அரசு புது உத்தரவு.


சிவகங்கை:போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில், இந்த முறை மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முதல் கட்ட பணி ஜன.,20லும், 2 வது கட்டமாக ஜன.,24 லும் நடக்கிறது.

 மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மருந்து கெட்டுபோகாமல்

 இருக்க குளிர்சாதன பெட்டிகளில் வைக்கவும், தடையில்லா மின்சாரம் வழங்கவும்,முகாம் மையங்களுக்கு மருந்துகளை எடுத்து செல்ல வாகன வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிக கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அங்கன்வாடி, நகர்நல மையம், கல்வி நிறுவன வளாகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு நாள் மட்டுமே வழக்கமாக முகாம் நடக்கும். விட்டுபோன குழந்தைகளுக்கு ஒரு சில இடங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்படும்.ஆனால், இம்முறை தினமும் மக்கள் அதிகம் வந்து செல்லும் பஸ் ஸ்டாண்ட்களில் மட்டும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டாயம் 3 நாட்கள் போலியோ சொட்டு மருந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment