யு.பி.எஸ்.சி. தேர்வில் புதிய விதிமுறை நிறுத்தம்: மத்திய அரசு அறிவிப்பு.


புதுடெல்லி, மார்ச் 15-

யு.பி.எஸ்.சி. தேர்வு முறையில் புதிய விதிமுறைகைள மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எழுதுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்ததாலும், பிராந்திய மொழிகளில் இத்தேர்வுகளை எழுத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாலும் பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

இப்பிரச்சினை இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. இதுதொடர்பாக பேசிய உறுப்பினர்கள், யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதுவதற்கான புதிய விதிமுறையை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டு 3 முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து உறுப்பினர்களின் விவாதத்திற்குப் பதிலளித்து பேசிய மத்திய இணை மந்திரி நாராயணசாமி, “புதிய விதிமுறைகள் தொடர்பாக யு.பி.எஸ்.சி. அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தீர்வு காணப்படும். அதுவரை இந்த விதிமுறை மாற்றம் தொடர்பான அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. தீர்வு காணப்படும் வரை யு.பி.எஸ்.சி. தேர்வில் பழைய முறையே தொடரும்” என்றார்.

No comments:

Post a Comment