"கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க 

வேண்டும்"

சென்னை: தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் சந்திரன் தலைமையில் நடந்தது. செயலாளர் உக்கிரபாண்டி வரவேற்றார். பிரசார செயலாளர் சுரேஷ், துணை தலைவர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர்.

தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான கலந்தாய்வு முறைகேடுகள் கண்டிக்கத்தக்கது; சம்பள உயர்வு தொடர்பான 3 நபர் குழு அறிக்கை, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது; ஆசிரியர்களின் பத்து மற்றும் பிளஸ் 2 சான்றிதழ்களின் "உண்மைத் தன்மை" வழங்கும் அதிகாரத்தை, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு வழங்க வேண்டும்.
பணிநீக்கம் செய்யப்பட்ட 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்; ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் பழனிவேல்ராஜன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment