மெளலானா ஆசாத் கல்விஉதவித் தொகை பெற அழைப்பு.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு பயிலும் ஏழை எளிய சிறுபான்மையின மாணவிகள்,  மத்திய அரசின் மெüலானா ஆசாத் தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்  என மாவட்ட ஆட்சியர்  அழைப்பு விடுத்துள்ளார்.
  இஸ்லாமியர், சீக்கியர்கள், புத்த மற்றும்   பார்சி ஆகிய சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ரூ. 12 ஆயிரம் இரு தவணைகளாக வழங்கப்படுகிறது.
எஸ்எஸ்எல்சி தேர்வில் குறைந்தபட்சம் 55 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  விண்ணப்பத்தை http:/maef.nic.in என்ற இணையதளத்தில் இருந்து படியிறக்கம் செய்து கொண்டு, அத்துடன் 11-ம் வகுப்பை சேர்க்கை அனுமதிச் சீட்டு நகல், வருமானச் சான்று, ஓய்வூதிய ஆணை, ரூ. 20 மதிப்புள்ள நீதிமன்றம் சாரா முத்திரைத்தாளில் உறுதி ஆவணம் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.
  கல்வி நிலையத்தின் தாளாளர் அல்லது தலைமை ஆசிரியர்கள் இந்த விண்ணப்பங்களைப் பெற்று சரிபார்த்து, வரும் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் The Secretary, Maulana Azad Education Foundation,(Ministry of Minority Affairs, Government of India) Chelms Fort Road, New Delhi  - 100055  என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment