டி.இ.டி. வெற்றியாளர்களிடம் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு.

சென்னை: சமீபத்தில், பணி நியமன ஆணை பெற்ற, ஆசிரியர்களின் சான்றிதழ்கள், மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணி, டி.ஆர்.பி.,யில் நடந்து வருகிறது. இதில், தகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் தேர்வை உடனடியாக ரத்து செய்ய, டி.ஆர்.பி.,யும், அவர்களை வேலையில் இருந்து, டிஸ்மிஸ் செய்வதற்கு, கல்வித்துறையும் முடிவு செய்துள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியமானடி..டி., தேர்வு வழியாக,இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், 18 ஆயிரம்பேர்சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்இவர்களுக்கு, 13ம் தேதிபணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.வழக்கமாகபணி நியமன ஆணை வழங்குவதற்குமுன்பலமுறைதேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.
இந்த முறை நேரம் இல்லாததால்மாவட்டங்களில் நடந்த சரிபார்ப்புடன்அப்படியேபணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டனஆனால்தற்போதுசான்றிதழ் சரிபார்க்கும் பணிநடந்து வருகிறதுசரியான கல்வித் தகுதி இல்லாத பல பேர்பணி ஆணைபெற்றிருக்கலாம் எனடி.ஆர்.பி., சந்தேகிக்கிறதுஅப்படிதகுதியில்லாதவர்கள்கண்டுபிடிக்கப்பட்டால்அவர்களின் தேர்வு ஆணையைஉடனடியாக ரத்து செய்ய,டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அதே போல்அவர்களைவேலையில் இருந்து, "டிஸ்மிஸ்" செய்வதற்குபள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது. இதுபற்றி டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறியதாவது:
சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் நடப்பதற்கு முன்எந்தெந்தப் பாடங்களைவேலைக்குத்தகுதியாக ஏற்க வேண்டும்எந்தப் பாடங்கள் தகுதியில்லை மற்றும் தமிழ்வழியில்படித்தவர்களை தேர்வு செய்வதற்கான விதிமுறைகள் குறித்துதெளிவானசுற்றறிக்கையைசான்றிதழ் சரிபார்ப்பில் ஈடுபட்ட குழுவினருக்குஅனுப்பியிருக்கவேண்டும்.
இதைசெய்யாததால்ஒவ்வொரு குழுவும்ஒவ்வொரு அணுகுமுறையுடன்,சான்றிதழ்களை சரிபார்த்துள்ளதுபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ்பி.காம்.,படித்தவர்களை எல்லாம்தேர்வில், "செலக்ட்" ஆக்கியுள்ளோம்இவர்கள்பட்டதாரிஆசிரியர் பணிக்குதகுதியில்லாதவர்கள்அதனால்மீண்டும் ஒருமுறைசரிபார்க்கும்பணி நடக்கிறதுஇவ்வாறுடி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.
பள்ளிக் கல்வி வட்டாரத்தினர் கூறியதாவதுடி..டி., வழி நியமனம்அவசர கதியில்நடந்ததுஅதனால் தான்சான்றிதழ்களைமீண்டும் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது.இந்தப் பணிஇரண்டு மாதம் நடக்கலாம் எனஎதிர்பார்க்கப்படுகிறது.
அதனால்அதுவரைசம்பளத்தை நிறுத்தி வைக்கலாமா எனவும்ஆலோசித்துவருகிறோம்.பணி நியமன ஆணையில், "இந்தத் தேர்வுதற்காலிகமானது எனவும்,தகுதியற்றவர்கள் எனகண்டுபிடிக்கப்பட்டால்உடனடியாகபணி நியமன ஆணை ரத்துசெய்யப்படும்" எனவும் தெரிவித்துள்ளோம்எனவேதகுதியில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்கண்டிப்பாகபணியில் இருந்து உடனடியாக, "டிஸ்மிஸ்"செய்வோம்இவ்வாறுகல்வித்துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தபின்தகுதியில்லாதவர்கள் எத்தனை பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என்ற விவரம் தெரியவரும்.

No comments:

Post a Comment