தேர்வுத்துறை இயக்குனர் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு.

காஞ்சிபுரம்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியர் குறித்த விபரங்களை, இணையதளம் வழியாகப் பதிவு செய்ய வேண்டும், என்ற தேர்வுத்துறை இயக்குனரின் உத்தரவுக்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பழைய முறையில் மாணவமாணவியர் விபரங்களை பதிவு செய்ய அனுமதிக்கவேண்டும்எனவும்  அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 தமிழகத்தில் அடுத்த ஆண்டுமார்ச் மாதம்பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு துவங்க உள்ளதுபொதுத் தேர்வு எழுதும்மாணவமாணவியர் குறித்த விபரங்கள்குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டுகல்விமாவட்ட வாரியாகதேர்வுத்துறை இயக்குனரகத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இம்முறை மாணவமாணவியர் விபரங்களைஇணையதளம் வழியாகப்ப திவுசெய்யும்படிதேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளதுஇதற்கு தலைமை ஆசிரியரிடம் எதிர்ப்புகிளம்பியுள்ளதுஇதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் மின்தடை அதிக அளவில் உள்ளதுபள்ளி நேரத்தில் இரண்டு மணிநேரம் மட்டுமே மின்சாரம் உள்ளதுஒரு மாணவனின் விபரங்களைப் பதிவு செய்ய,குறைந்தது பத்து நிமிடங்களாகிறது.
மாணவனின் புகைப்படத்தைகணினி ஏற்றுக் கொள்ள மறுக்கிறதுமாணவர்களின் பிறந்ததேதி, 98ம் ஆண்டு ஜூன் மாதமாக இருந்தால்பதிவு செய்ய முடிகிறதுஅகற்கு மேல்இருந்தாலோகுறைவாக இருந்தாலோகணினி ஏற்றுக் கொள்வதில்லை.
எனவேதேர்வுத்துறை இயக்குனர் கூறியபடிஜனவரி மாதம் நான்காம் தேதிக்குள்,அனைத்து மாணவர்களின் விபரங்களைஇணையதளத்தில் பதிவு செய்வது சிரமம்.மேலும்தர்மபுரிகிருஷ்ணகிரி மாவட்டங்களில்மாணவமாணவியரின் விபரங்கள்,பழைய முறைப்படி குறுந்தகடில் பதிவு செய்யப்பட்டுதயார் நிலையில் உள்ளது.அவற்றை மீண்டும் இணையதளத்தில் பதிவு செய்ய காலதாமதமாகும்.
எனவேபிளஸ் 2 தேர்வுக்கு அனுமதித்தது போல்பழைய முறையை பின்பற்றி,திருத்தங்களை மட்டும் இணையதளம் மூலம் மேற்கொள்ளதேர்வுத்துறை இயக்குனரகம்உத்தரவிட வேண்டும்இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment